Tamil Poems scribbled by 'Jumaana' Syed Ali
 
Jumaana Syed Ali, Chennai, India  
Islam Networking at www.jsyedali.comSMA Networking at www.jsyedali.com
 
Better to have loved and lost than to have never loved at all
My Profile
About Me
Remembrance of Jumaana
Remembrance of Rabiya
Remembrance of Fatima
Help to end SMA
My Tamil Poems
இது இனிய தவம்
நினைவுகள்
தொட்டில் ஞாபகங்கள்
 
My Websites
4Creative Web Solutions
Add4Biz
 
Connect Me
Facebook
Twitter
Orkut
Wayn
Meetup
SMA Space
 
Contact Me
Leave your feedback
jsyedali@gmail.com
• +91 98401 38661
My Tamil Poems
நினைவுகள் Back to My ProfileLeave your comments or valuable feedback

வீணை மீட்டும் விரல்கள் போல்
நெஞ்சை மீட்டிப் போகின்றன
உன் நினைவுகள்!

வளர்பிறை போல் அந்
நினைவுகள் எல்லாம்
வளர்ந்து கொண்டேயிருக்க
நான் மட்டும் தான்
தேய்ந்து கொண்டேயிருக்கறேன்
தேய்பிறை போல!

காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல்
திசை மாறும் விசைப் படகினைப் போல்
உன் நினைவுகள் என்னை
திசை மாறச் செய்கின்றன!

கடல் அலைகள்
துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்து வந்தாலும்
கரையை அணைத்துக கொள்வதில்லை!
வருடி விட்டுத் தான் செல்கின்றன.
அது போலத் தான்
உன் நினைவுகளும்!

ஆனாலும் அந்த ஆர்ப்பரிப்பில்
கரையே அடித்து செல்லப்படும்
அபாயம் கூட நேரிடலாம்!
அது போலத் தான்
உன் நினைவுகள்
சில நேரங்களில் என்னை
சிதையுண்டு போகச் செய்கின்றன!

சட்டென வந்து போக
வானவில் அல்ல
உன் நினைவுகள்!
அவை வானத்து
நிலவு போல்…

சில நேரங்களில்
தேய்வது போல் தோன்றினாலும்
பல நேரங்களில்
வளர்ந்து கொண்டே
தான் போகிறது!

நிலவில் வசிக்க
முடியுமா என யோசித்துக் கொண்டிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
உன் நினைவுகளில்
வசிப்பதே சுகமாகிப் போனது
எனக்கு!

உலகின்
ஏதோ ஓர் மூலையில்
நீ உன் கணவனோடு!
நான் இங்கே
இன்னமும்
உன் கனவுகளோடு…

Words cant just explain how much I miss you...
   
- "Jumaana" Syed Ali  
 
 
Copyrights 2008 - 2010. JSyedAli.com | Disclaimer